Skip to main content

டாஸ்மாக் டோக்கன் வாங்க ஓட்டபந்தயம்...  ஓடி வந்து வரிசையில் நின்ற குடிமகன்கள்!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020
TASAMC INCIDENT IN CHITHAMPARAM

 

ஊரடங்கு காலத்தில் 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் முடியிருந்ததால் எப்போது கடையை திறப்பார்கள் என்று குடிமகன்கள் கத்திருந்தனர். இதனிடையே குடிமகன்கள் மதுவுக்கு பதில் எத்தனால், சொல்யூஷன் உள்ளிட்ட எரிசாரயங்களை குடித்து உயிர் இழந்த சம்பவங்களும் தமிழகத்தில் பரவலாக நடைபெற்றது.


இந்தநிலையில் கடந்த வாரம் அரசு மதுமான கடையை திறந்தது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு. இந்த நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. அதன் அடிப்படையில் 16-ந்தேதி முதல் தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

 

 


டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க டோக்கன் முறையை அரசு அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து டோக்கன் இருந்தால்தான் மதுபாட்டில் வாங்கலாம் என்று காலையிலே குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபாட்டில்களை வாங்க டோக்கன் கொடுப்பதை அறிந்த குடிமகன்கள் ஓட்டபந்தயத்தில் ஓடுவதைபோல் ஓடி வரிசையில் நின்றனர்.

 

 

TASAMC INCIDENT IN CHITHAMPARAM

 

இதனையறிந்த சிதம்பரம் காவல்துறை ஆய்வாளர் முருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் அவர்களை விரட்டி சமூக இடைவெளியுடன் நிற்க வைத்தனர். பின்னர் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.