Skip to main content

சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை!!

Published on 09/10/2018 | Edited on 09/10/2018

 

nakkeeran gopal

 

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான  நக்கீரன் கோபால் அவர்கள் எந்த ஆவணங்களும் இன்றி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன் கோபால் அடையாறு சரக போலீசார் கைது செய்துள்ளனர். 

 

நக்கீரன் பத்திரிகையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான கட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

 

முதலில் அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிப்பதாக கூறப்பட்டு அலைக்கழிப்பு செய்யப்பட்ட  நிலையில் அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்மீது 124-A பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சார்ந்த செய்திகள்