ADVERTISEMENT

கோயம்பேடு மார்க்கெட்டை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர்கள்!! (படங்கள்)

12:08 PM Jun 12, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்த சூழலில், தற்போது அதனுடைய தாக்கம் சற்று குறைந்தே காணப்படுகிறது. தமிழ்நாடு அரசின் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் சுகாதாரத்துறையின் தீவிர செயற்பாடுகளாலும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கரோனாவின் தாக்கம் மிகவும் குறைந்துவருகிறது.

ADVERTISEMENT

அதேபோல் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தினமும் கரோனா தாக்கம் அதிகமுள்ள இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு, அங்கு ஏற்படும் உடனடித் தேவைகளையும் பூர்த்தி செய்துவருகிறார். அந்த வகையில், இன்று (12.06.2021) சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வுசெய்தனர். மேலும், அங்கு நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமை நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT