Skip to main content

கோயம்பேடு சந்தையில் கரோனா பாதிப்பு... சென்னை மாநகராட்சி ஆணையருக்கு 11 கேள்விகள் எழுப்பியுள்ள மா.சு!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

koyambedu market



கரோனா தொற்றின் பரவலுக்கான ஒரு காரணமாகத் தற்போது மாறி வருகிறது சென்னையிலுள்ள கோயம்பேடு பெருவணிகச் சந்தை!  இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டிய சென்னை மாநகராட்சியின் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.சுக்கு 11 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் எம்.எல்.ஏ.!  
                             

கடிதத்தின் துவக்கத்தில், ’கரோனா பாதிப்பு ஏற்பட்டு மாநகர மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள இடர்மிகு இந்நேரத்தில் எமக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களைச் சரி செய்ய வேண்டும்’ என்கிற எண்ணத்தில் கடிதம் எழுதியதாகத் தெரிவித்திருக்கிறார் மா.சு.! அந்தக் கடிதம் தற்போது பரபரப்பாகி வருகிறது. 


1. கரோனா தொற்று தேசிய பேரிடராக மத்திய அரசு மார்ச் 14- ஆம் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து மார்ச் 17- ஆம் தேதி முதல் தியாகராய நகர் ரெங்கநாதன் தெரு கடைகள் உட்படத் திரையரங்குகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள் மூடப்பட்டது. மார்ச் 22- ஆம் தேதி மற்றும் 25- ஆம் தேதி முதல் ஊரடங்கு உள்ளது. 
 

இன்று "கரோனா பாதிப்பின் மையமானது கோயம்பேடு" என்பது தலைப்புச் செய்தி ஆகியுள்ளது. நேற்று இரவு வரை 88 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். சுமார் 15,000 கூலித் தொழிலாளர்களும் தினந்தோறும் லட்சக்கணக்கானோரும் ஒன்றுகூடும் "கோயம்பேடு சந்தையை" சென்னை மாநகராட்சி கணக்கில் எடுத்துத் தடுப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்?


2. கடந்த நான்கு நாட்களாக அரசு நிர்வாகங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் "கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்" என்பதைப் போல் தானே?


3. சென்னையில் திரு.வி.க. நகர், இராயபுரம் மண்டலங்களில் உள்ள 30 வட்டங்கள் மற்றும் கோயம்பேடு வட்டம் ஆகியவற்றை மிக ஆபத்தான வட்டங்களாக அறிவித்து நாம் கடந்த பேரிடர் காலங்களில் செய்வதைப் போல, அந்த வட்டங்களுக்கும் மற்ற மண்டலங்களுக்கும் தனித்தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் Nodal officer-களாக நியமிக்காதது ஏன்? காரணம், இந்த வட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, சில மாநிங்களில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. (உதாரணத்திற்கு வார்டு எண் 77-ல் மட்டும் 149 பேர்) அப்படி நியமித்தால் தொற்று பரவுதலை அனைத்து வகையிலும் அதிகாரம்படைத்த அவர்களால் தடுக்க முடியுமே?


4. சென்னையில் மண்டல வாரியாகச் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை எனப் பிரிப்பதை, வட்ட வாரியாகச் செய்தால் மைக்ரோ ப்ளானிங் மற்றும் நடவடிக்கைக்கு பயன்படுத்த ஏதுவாக இருக்குமே? சென்னையில் உள்ள 200 வார்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் ஒரு தொற்றாளர் கூட கண்டறியப்படவில்லை என்பது உண்மைதானே?


5. திமுக தலைவர் முக ஸ்டாலின் மேயராக இருந்த போது, ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன் மத்திய - மாநில அரசுகளின் சேவைத்துறைகளை ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்தி பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டதே, அதுபோல குலை நடுங்கும் இந்த கரோனா பேரிடர் சமயத்தில் சேவைத்துறைகளை ஒருங்கிணைத்து அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளாதது ஏன்? 
 

koyambedu market


6. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது. போதுமான விழிப்புணர்வு இல்லாததால் சென்னையில் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளாளர்கள் வாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளார்கள் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்தானே? அப்படிப்பட்டவர்கள் பெரும்பகுதியாக வசிக்கின்ற வடசென்னையில் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் சிக்கல் இருப்பதைத் தாங்கள் உணராதவரா என்ன?
 

55

 

7. அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் முதலான தொண்டு நிறுவனங்களோடு இணைந்து ஒரே நாளில் 155 "மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை" நடத்தி சென்னை மாநகராட்சி முதன்முறையாக 2007- இல் 'லிம்கா' சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததைக் கருத்தில்கொண்டு, அத்தகைய தொண்டு நிறுவனங்களை இதுபோன்ற கஷ்டமான சமயங்களில் பயன்படுத்திக்கொள்வது சரியாக இருக்குமல்லவா?

 

http://onelink.to/nknapp


8. "மூன்று நாட்களில் கரோனா பூஜ்யமாகும்"; "இந்த வைரஸ் பணக்காரர்களை மட்டுமே தாக்கும். ஏழைகளைத் தாக்காது" என்று சொன்ன தமிழக முதல்வரின் ஞான கணிப்பையும் மீறி கோயம்பேட்டில் கொத்தமல்லி விற்றவரும் வாங்கியவருமாகச் சேர்த்து சென்னையின் பாதிப்பு எண்ணிக்கை 1200-ஐ தாண்டி போகும் நேரத்தில் சென்னையில் மிக ஆபத்தான வட்டங்களில் இராணுவம் மற்றும் அவர்களின் மருத்துவத் துறையைப் பயன்படுத்த யோசிக்கலாம் அல்லவா?


9. வரலாறு காணா பேரிடர் நேரத்திலும் அரசின் நிவாரணப் பொருட்களை ஏழை-எளியோருக்கு வழங்கும்போது ஆளும்கட்சியைச் சேர்ந்த 'வட்டம் - பகுதிகளை' கூட்டுச்சேர்த்துக் கொள்வது நியாயமா?   

10. 98 சதவீதம் பேருக்கு எவ்விதமான அறிகுறியும் இல்லாத நிலையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சொன்ன தாங்கள், அத்தகையவர்களைத் தனி விடுதிகளில் வைத்து கண்காணிப்பதுதானே சரியாக இருக்கும்?  


11. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் முதலானோருக்கு தொற்று ஏற்படுவதைப் பார்க்கும்போது அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களில் குறைபாடுகள் இருப்பதை உணரமுடிகிறதா? இல்லையா? 

என 11 கேள்விகளை எழுப்பியதுடன், ‘’இவைகளைக் குற்றச்சாட்டுகளாக கருதிடாமல் ஆலோசனைகளாக ஏற்று மாநகர மக்களைக் காக்கக் கவனம் செலுத்திட வேண்டுகிறேன்‘’ என்று கடிதத்தை முடித்திருக்கிறார் சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.