இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் இளம்பெண் வன்கொடுமையைக் கண்டித்து நாளை (05/10/2020) மாலை 05.00 மணிக்கு தி.மு.க. மகளிரணி சார்பில் எம்.பி. கனிமொழி தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெறும். இந்த பேரணியில் மகளிரணியினர் திரளாக பங்கேற்க வேண்டும். ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும்; ராகுல் காந்தியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அராஜகத்தின், சர்வாதிகாரத்தின், எதேச்சதிக்காரத்தின் ஆட்சி உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. ராகுல் மீதான அவமதிப்பு நிகழ்வுகள் நாடாளுமன்ற உரிமைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நாம் ஏற்றும் ஒளி, தவறுகளுக்கு எதிரானதை எரிக்கட்டும்; இந்தியா முழுவதும் போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்றட்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டி ராஜீவகாந்தி சிலையில் இருந்து ஆளுநர் மாளிகை வரையிலான பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.