Skip to main content

அடேங்கப்பா இப்படியும் கொள்ளையா... திருமணத்தை வியாபாரமாக்கிய கும்பல்... கூட்டுக்களவாணிகளான செட்டப் மாப்பிள்ளையும் புரோக்கரும்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

the gang that commercialized the marriage ... the conspirators, the groom and the broker!

 

ஆறு இளம்பெண்களைத் திருமணம் செய்து கிடைக்கும் பணத்தைப் பங்குபோடும் வியாபாரத் திருமணக் கும்பலை வளைத்துப் பிடித்திருக்கிறார்கள் நெல்லை மாநகர தனிப்படை. பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.பி. காலனியைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ். இவர் பேராசிரியராக வேலைபார்த்து ஒய்வுபெற்றவர். இவரது மகளான விஜிலாராணிக்கும் (33) தூத்துக்குடி மாவட்டத்தின் சாயர்புரம் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ள வின்சென்ட் பாஸ்கருக்கும் (40) கடந்த ஆண்டு முக்கிய உறவினர்கள் முன்னிலையில் பாளை பெருமாள்புரம் சர்ச்சில் திருமணமாகியிருக்கிறது. வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டினருக்கு 40 பவுன் தங்க நகைகள் 3 லட்சம் ரொக்கம் என அள்ளிக்கொடுத்திருக்கிறார் பேராசிரியர் ஜோசப்ராஜ். தம்பதியர் சாயர்புரத்தில் குடியேறினர்.

 

the gang that commercialized the marriage ... the conspirators, the groom and the broker!

 

இரண்டு மாதத்திற்குப் பின்பு மனைவி விஜிலாராணியிடம் தனியாக வியாபாரம் செய்யப் பணம் வேண்டுமென்றும் அடமானம் வைக்க அவளின் நகைகளைக் கேட்க, கணவரிடம் 40 பவுன் நகையைக் கொடுத்திருக்கிறார் விஜிலாராணி. இதையடுத்து, நகையுடன் வின்சென்ட் பாஸ்கர் தலைமறைவானார். பதறிய விஜிலாராணி தன் பெற்றோர் வீட்டிற்கு நடந்ததைச் சொல்ல, அவர்கள் வின்சென்ட் பாஸ்கரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து விஜிலாராணி நெல்லை கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம் புகார் கொடுக்க, அதைனையடுத்து போலீஸ் துணைக் கமிஷனரான சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி கயத்தாறில் 4வது மனைவியுடன் வசித்துவந்த வின்சென்ட் பாஸ்கரின் செட்டப் தாயான சாத்தான்குளம் சியோன் மலையைச் சேர்ந்த பிளாரன்ஸ், சித்தியாக நடித்த தாமரைச்செல்வி ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

 

the gang that commercialized the marriage ... the conspirators, the groom and the broker!

 

விசாரணையில் வின்சென்ட் பாஸ்கர் பல பெண்களைத் திருமணம் செய்து ஆடம்பரமாக வாழ்ந்தது தெரியவந்திருக்கிறது. கரோனா தடை காலத்தைப் பயன்படுத்தி திசையன்விளைப் புரோக்கர் இன்பராஜ் மற்றும் வின்சென்ட் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் திட்டமிட்டு விஜிலாராணியை ஏமாற்றித் திருமணம் செய்து, அதில் வரதட்சணையாக கிடைத்த நகை, பணத்தைப் பங்கு போட்டது தெரியவந்திருக்கிறது. புரோக்கர் இன்பராஜ் மூலமாக செட்டப் தாய், செட்டப் சித்தியைக் கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளில் 6 திருமணங்களைச் செய்த கல்யாண களவாணி மன்னனின் விஷயங்கள் வெளியே வந்திருக்கின்றன. கிடைத்த பணத்தில் தாயாக நடித்தவருக்கு 15 ஆயிரம், செட்டப் சித்திக்கு 10 ஆயிரம், கல்யாண மன்னனும், புரோக்கரும் மீதமுள்ளவற்றைப் பங்கு போட்டிருக்கிறார்கள்.

 

the gang that commercialized the marriage ... the conspirators, the groom and the broker!

 

இதுகுறித்து அனைவர் மீதும் வழக்குப் பதிவுசெய்த பாளை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி, “மூன்று பேரைக் கைது செய்திருக்கிறோம். ஆரம்பத்தில் சாயர்புரம் பணகுடி பகுதியின் திருமணமாகி குழந்தையுடனிருந்த இரண்டு பெண்களைத் திருமணம் செய்து வின்சென்ட் பாஸ்கர் பணத்துடன் தலைமறைவானார். அடுத்து களக்காடு, கீழகாடுவெட்டியில் இரண்டு பெண்கள், தூத்துக்குடியில் 5வது, விஜிலாராணியை 6வதாக திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறார்கள். இதற்குத் திட்டமிட்ட புரோக்கர் இன்பராஜை தேடிவருகிறோம்.” என்றார்.

 

இப்படியும் திருமணக் கொள்ளையா? கண்ணைக் கட்டுது சாமியோவ்...!!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்