கன்னியாகுமரியில் ஆயிரங்கால் போலிமுகம் கடலில் ராட்சத அலையில் சிக்கிய 4 மாணவர்கள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய நான்கு மாணவர்களில் 3 மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாணவரை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மீட்கப்படாத அந்த மாணவரின் பெயர் கிருஷ்ணகுமார் என்றும் தெரியவந்துள்ளது. அவரை தேடும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் தேனியில் கும்பக்கரை அருவியில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேனி பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளித்த கல்லூரி மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் பழனி மஞ்ச நாயக்கன்பட்டி சேர்ந்த விவேக் என தெரியவர உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ADVERTISEMENT
Show comments