Skip to main content

அரசின் அலட்சியம்... வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்... தவிக்கும் மீனவர்கள்!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

 

சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடலில் வான் முட்டும் அளவுக்கு உயர்ந்தெழும் அலையால் வீடுகளில் வெள்ளம் புகுந்து மீனவர்களை அச்சுறுத்தி வருகிறது. இதில் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன் ராஜாக்கமங்கலம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமங்களில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 100-க்கு மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடு மற்றும் பள்ளிக்கூடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் கடல் வெள்ளம் புகுந்த அந்த வீடுகளில் கடல் மணல் குவியல் குவியலாக உள்ளன. இதனால் அந்த மணல் குவியல்களை அப்புறபடுத்தாமல் வீடுகளில் தஞ்சம் அடைய முடியாது. எனவே மீனவர்கள் தொடர்ந்து 3 நாட்களாக மணல் குவியல்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் அவர்களால் அப்புறபடுத்த முடியவில்லை. மேலும் மாவட்ட நிர்வாகமும் இதை கண்டுகொள்ள வில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மீனவர்கள் கூறும் போது…இந்த பகுதிகளில் தூண்டில் வளைவு கேட்டு அரசிடம் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் அரசு அதை செவி கொடுத்து கேட்க வில்லை. எதாவது சம்பவங்கள் நடக்கும் போது மட்டும் உடனே தூண்டில் வளைவு அமைத்து தருகிறோம் என கூறி விட்டு செல்வார்கள். அதன்பிறகு இந்த பக்கம் வருவது இல்லை அதனால் அடிக்கடி கடல் கொந்தளிப்பால் கடல் நீர் வீட்டுக்குள் வந்து விடுகிறது. இனியாவ து அரசு மெத்தனம் காட்டாமல் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.