ADVERTISEMENT

சிலிண்டர் குடோனில் தீ விபத்து... உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு

08:11 PM Oct 12, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிலிண்டர் குடோன் ஒன்று இயங்கி வந்தது. இங்கிருந்து சிலிண்டர்கள் கிராம பகுதிகளுக்கும், நகர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. திடீரென கடந்த மாதம் 29 தேதி மாலை அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் எட்டு பேர் நூறு சதவிகித தீக்காயம் அடைந்தனர். மொத்தம் 20 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது.

சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே உயிரிழப்பு எண்ணிக்கை ஒன்பதாக இருந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கத்தை சேர்ந்த பூஜா என்ற ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT