Skip to main content

கடன் பிரச்சனை; மனைவி, பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

father who poisoned his wife and children

 

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் சரகம், வாண்டையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ்(45). இவரது மனைவி பிரபாவதி(32). இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சிதம்பரம் புறவழிச்சாலை, தாயம்மாள் நகரில் குடியிருந்து வருகின்றனர். கணேஷ் சிதம்பரம் பொய்யாப்பிள்ளைச்சாவடி பைபாஸ் அருகே வி.எஸ்.கே. என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்துள்ளார். இவர் கடந்த 23-ம் தேதி இரவு வியாபாரத்தில் கடன் அதிகமாகி நஷ்டம் ஏற்பட்டதால் திராட்சை ஜூஸில் எலி பேஸ்ட்டை கலந்து மனைவி பிரபாவதி மற்றும் அவரது இரு பிள்ளைகளுக்கும் தெரியாமல் கொடுத்துள்ளார்.  

 

இதனையடுத்து, நேற்று (24.11.2022) காலை 11 மணியளவில் அனைவரும் வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததால் மனம் உடைந்த கணேஷ், புதுச்சத்திரம் அருகே அன்னப்பன்பேட்டை கிராமத்திற்குச் சென்று, பி.முட்லூரில் எம்ஜிஆர் சிலை அருகே உரக்கடை வைத்துள்ள அக்பர் அலி என்ற தனது நண்பருக்கு  வாட்ஸ்ஆப்பில் ஆடியோ ஒன்றினை அனுப்பி உள்ளார். அதில், தனக்கு வியாபாரத்தில் கடன் அதிகமாகி விட்டதாகவும், எனது சாவுக்கு சிவாயம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன் (அதிமுக), தச்சம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் டி.எம்.ஆர். சகோதரர்கள் ஐவர் மற்றும் நாயுடுமங்கலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் ஆகியோர்தான் காரணம் என்று தெரிவித்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

 

கணேஷ் அனுப்பிய ஆடியோவைக் கேட்ட அக்பர் அலி, கணேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் கவலைக்கிடமாக இருந்த மூன்று பேரையும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். கணேஷை தேடிச் சென்ற போது அன்னப்பன்பேட்டை அருகே ஒரு மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து கணேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எலி பேஸ்ட் சாப்பிட்ட மூவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணேஷ் தனது சட்டை பாக்கெட்டில், எனது மரணத்திற்குக் காரணம் சிவாயம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன் மற்றும் தச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த  டி.எம்.ஆர். சகோதரர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகன், ராஜா, கண்ணன், விஜயராகவன், நடராஜன்(பாஜக) மற்றும் நாயுடுமங்கலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்றும், தனக்கு பணம் தர வேண்டியவர்கள் விவரம் பற்றியும் குறிப்பிட்டு எழுதி வைத்திருந்தார். போலீசார் அதனைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.