Skip to main content

பசுமை வழிச்சாலையை விவசாயிகள் எதிர்க்கவில்லை; சமூக விரோதிகள் தான் எதிர்க்கின்றனர்: அமைச்சர் கருப்பணன்

Published on 24/06/2018 | Edited on 24/06/2018
karuppu


சென்ன - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் எதிர்க்கவில்லை, சமூக விரோதிகள் தான் எதிர்க்கின்றனர் என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

 

 

காவிரி நீர் அமைக்க காரணமாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவத்து அதிமுக பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் பங்கேற்று பேசினார். இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. சென்ன - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் எதிர்க்கவில்லை, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் தான் எதிர்க்கின்றனர். விவசாயிகள் இந்த திட்டத்திற்கு அதிக அளவில் ஆதரவு தருகின்றனர். இரண்டரை ஏக்கர் விளைநிலத்திற்கு 30 கோடி ரூபாய் வரை தரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்