ADVERTISEMENT

வேதாரண்யத்தில் போலி மது தயாரித்தவர் கைது!

09:04 AM Feb 19, 2021 | kalaimohan

ADVERTISEMENT

கோப்புப்படம்

ADVERTISEMENT

நாகையில் போலி மதுபானம் தயாரிக்க உதவியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள நெய்விளக்கு பகுதியில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக கொடுக்கப்பட்ட புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலி மதுபானம் தயாரிக்க உதவிய இளையராஜா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தொடர் விசாரணையில் போலி மதுபானம் தயாரித்த மகேந்திரன் என்பவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

எரிசாராயத்தைப் பயன்படுத்தி போலி மதுபானம் தயாரித்த மகேந்திரனிடம் இருந்து போலி மது தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட 70 லிட்டர் எரிசாராயம், 700 மதுபாட்டில்கள், ஸ்டிக்கர் ஆகியவை போலீசார் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலி மதுபானம் தொடர்பாக இருவர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட சம்பவம் வேதாரண்யம் நெய்விளக்கு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT