Skip to main content

ஒரேநாளில் 2600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு... கைதாகாத உற்பத்தியாளர்கள்!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
thiruvannamalai


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 850 ஊராட்சிகளில் பெரும்பாலான ஊராட்சிகளில் சாராய விற்பனை படு ஜோராக விற்பனையாகிறது. இதனை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஏ.டி.எஸ்.பி அசோக்குமார் தலைமையிலான டெல்டா தனிப்பிரிவு போலீஸார் தீவிரமாக ரெய்டு நடத்தி சாராய விற்னையாளர்கள், உற்பத்தியாளர்களை கைது செய்து வருகின்றனர். அதோடு, சாராய ஊறல்களை அழித்தும் வருகின்றனர். ஆனாலும் சாராய விற்பனை என்பது முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. விற்பனை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.


மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, டெல்டா தனிப்பிரிவு போலீசார் இணைந்து நடத்திய சாராய வேட்டையில் ஆங்குணம்,  எலந்தபட்டு பகுதியில் ஆங்குணம் பகுதியில் 1000 லிட்டர் சாராய ஊறலும், எலந்தபட்டு பகுதியில் 600 லிட்டர் சாராய ஊரலும் கைப்பற்றி அங்கேயே அழித்தனர்.

அதேபோல் தாலுகா டி.எஸ்.பி ஹேமசித்ரா தலைமையில் தண்டராம்பட்டு காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடத்திய வேட்டையில் வேப்பூர்செக்கடி பகுதியில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கைப்பற்றி அழிக்கப்பட்டது. ஒருநாளில் 2600 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


சாராய ஊறல் அழிக்கப்பட்டதே தவிர சாராய உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் கைதாகவில்லை, சாராய விற்பனையாளர்கள் மட்டும்மே கைதாகி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. சாராயத்தை கொண்டு வந்துதரும் ட்ரான்ஸ்போர்ட்டர்களை மடக்கி கைது செய்ய தொடங்கி, வாகனங்களை பறிமுதல் செய்தால் மாவட்டம் முழுவதும் சாராயம் செல்வது தடைபடும் என்கின்றனர் மதுவுக்கு எதிரானவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்