Skip to main content

கடற்கரையில் கிடந்த 42 வயது பெண்ணின் சடலம்; 20 வயது இளைஞரைப் பிடித்து விசாரித்ததில் வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

The body of a 42-year-old woman found on the beach; A 20-year-old youth was arrested

 

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் 42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி அருகே உள்ளது தேத்தாகுடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதி. இந்த பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருடைய மனைவி துர்கா தேவி (வயது 42). இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் அண்மையில் நாடு திரும்பிய சுந்தரமூர்த்தி விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மகளிர் சுய உதவிக் குழுவுக்கு கடன் தொகை கட்டிவிட்டு வருவதாக துர்காதேவி வீட்டில் கூறிவிட்டு வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் அன்று மாலை வரை வீட்டுக்கு வராததால் பதற்றமடைந்த கணவர் மற்றும் அவரது உறவினர்கள் துர்காதேவியை பல இடங்களில் தேடி உள்ளனர்.

 

அதே வேளையில் வேதாரண்யம் கடற்கரை பகுதியில் பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்தது துர்காதேவி என்பது தெரியவந்தது. அவர் மீது கார் ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்பட 10 பவுன் நகைகள், செல்போன் ஆகியவை காணவில்லை.

 

துர்காதேவியின் உடலைக் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மயக்கவியல் படித்து வந்த 20 வயது இளைஞரான அருண் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

The body of a 42-year-old woman found on the beach; A 20-year-old youth was arrested

 

விசாரணையில் துர்காதேவி மீது இளைஞர் காரை ஏற்றிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என நடத்தப்பட்ட விசாரணையில், துர்காதேவிக்கும் இளைஞர் அருணுக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்துள்ளது. சம்பவத்தன்று இருவரும் புஷ்பவனம் கடற்கரை பகுதியில் உல்லாசமாக இருந்தனர். அப்பொழுது துர்காதேவி மாணவரிடத்தில் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். கொடுக்கவில்லை என்றால் முறையற்ற தொடர்பிலிருந்ததை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண், துர்காதேவி மீது மூன்று முறை காரை ஏற்றிக் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இளைஞர் அருணை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.