இதனை தொடர்ந்து செல்வி ராமஜெயத்தின் மருமகனின் தம்பி ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் முத்து உள்ளிட்ட ஐந்து பேர் கூட்டாக சேர்ந்து ஊழியர் பாலசந்தரை சரமாரியாக தாக்கியதாக கொலை மிரட்டல் விடுத்தனர் என்று மின்சார ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையத்தை மின்சார ஊழியர்கள் அனைவரும் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் சாலை மறியலிலும் ஈடுபட முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். தாக்குதலுக்குள்ளான பாலகிருஷ்ணன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்கப்பட்ட பாலகிருஷ்ணன் கூறுகையில், " எங்கள் உயர் அதிகாரியின் உத்தரவின்பேரில் நாங்கள் பணி செய்து கொண்டிருந்தோம். எங்களை முன்னாள் அமைச்சரின் உறவினர் ரமேஷ் என்னையும், உயர் அதிகாரிகளையும் கடுமையான வார்த்தைகளால் ஆபாசமாக திட்டினார். அவர்கள் உன்னால் என்ன செய்ய முடியும், முடிந்ததை செய்து பார் என்று கொலைமிரட்டல் விடுத்து நாங்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்று என்னை தாக்கினார்கள். இதுதொடர்பாக சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழியர்களின் போராட்டத்தால் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்றார்.