Skip to main content

நீலாங்கரை அடாவடிப் பேர்வழி அமைச்சரின் மகனா..? அமைச்சரே புகார் கொடுக்க, அமமுக பிரமுகர் மீது வழக்கு..!!!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

விடிந்தும், விடியாத அந்த அதிகாலைப் பொழுது அவ்வளவு ஈசியாக இருக்கவில்லை நீலாங்கரைப் போலீஸிற்கு.! எங்கிருந்தோ மிகுந்த வேகத்தில் வந்த கார் சாலையில் ஓரமாய் நின்றுக்கொண்டிருந்த ஆட்டோவினை இடித்து சுக்கு நூறாக்கிய நிலையில் அந்த வண்டியை இயக்கி வந்த ஹேங் ஓவர் போதைக்காரன் அங்கு கூடியிருந்த கூட்டத்தினிடமும், பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வர எண்ணிய போலீசாரிடமும் முறைத்துக் கொண்டு அடாவடியாக நடந்துக் கொண்டது வாட்ஸ் அப்பில் வைரலாக, " இந்த அமைச்சரின் மகன் தான் இவன்." என வாட்ஸ் அப்பில் வைரலானது. அமைச்சரே தவறான வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க அமமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது சைபர் கிரைம் போலீஸ்.

 Minister's son is the attacker of the police?


மதுரை வெள்ளங்குடி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் புகழேந்தி. வெளிநாட்டிற்கு பழங்களை ஏற்றுமதி செய்துவரும் இவரின் மகன் பிரச்சனைக்குரிய நீலாங்கரை அடாவடிப் பேர்வழியான நவீன். 30 வயதான நவீன் திருவான்மியூர் ராஜா சீனிவாசன் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஏற்றுமதி வியாபாரத்தைக் கவணித்து வந்துள்ளார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவினில் வீட்டை விட்டு சென்றவர், உற்சாகபான மயக்கத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலைப் பொழுதில்  TN59BJ3038 பதிவெண் கொண்ட தன்னுடைய ஹூண்டாய் வெரினா காரினை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் பொழுது சாலையிலிருந்த ஆட்டோவினை இடித்து சுக்கு நூறாக்கியிருக்கின்றார். அங்கிருந்த மக்கள் காரினை சூழ்ந்து கொள்ளவே, இவரும் அவர்களுடன் மல்லுக்கட்டியிருக்கின்றார். ஒருக்கட்டத்தில் இப்பிரச்சனையை சமாளிக்க நீலாங்கரை ஏட்டையா இளவரசன் மற்றும் ஒரு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார் எஸ்.எஸ்.ஐ.பழனி. ஆனால், அவர்களுடனே மல்லுக்கட்டியிருக்கின்றார் போதைப் பார்ட்டி நவீன். ஒருக்கட்டத்திற்கு பிறகு நவீனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவர் மீது 294(b).353.506(1) ipc பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. அத்துடன் இல்லாமல் பாத்ரூமிற்கு செல்லும் போது வழுக்கி விழுந்துவிட்டான் என நவீனின் கை உடைந்த புகைப்படத்தையும் பத்திரிகைகளுக்கு அளித்தது.

 

 Minister's son is the attacker of the police?


இதே வேளையில், காவல்துறையிடமும், பொதுமக்களிடமும் மதுமயக்கத்தில் தகராறு செய்த நவீனின் வீடியோவினை சமூக வலைத்தளங்களில் பரவ செய்து " இவன் சசிகலா முதல்வராக்கும் முயற்சியின் போதும், ஓ.பி.எஸ்.தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த போதும் மித மிஞ்சிய உற்சாகப் பானத்தில் பத்திரிகைகளை அர்ச்சித்த அமைச்சரின் மகன்" என மறைமுகமாகவும், இன்னாரின் மகன் என நேரிடையாகவும் வைரலாக்கினர் சிலர். இது உண்மையா.? என நீலாங்கரை போலீசாரை கேள்வி மேல் கேட்டு நிம்மதியை குலைத்துக் கொண்டிருந்தனர் நெட்டிசன்கள். " இல்லையில்லை.! அமைச்சரின் மகன் என்றால் கையை உடைத்திருப்பார்களா.? இவன் வேறு.?" என அந்த வதந்திக்கு வக்காலத்து வாங்கி வந்தனர் சிலர்.

 

 Minister's son is the attacker of the police?

இவ்வேளையில், சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகமோ, "என்னைக் குறிவைத்து தவறான வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க, அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே அமமுக பிரமுகர் மீது சென்னை மத்திய சைபர்கிரைம் போலீஸ் இருபிரிவுகளின் கீழ் வழக்கு  பதிவு செய்து வதந்திக்கு வாய்ப்பூட்டுப் போட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.