ADVERTISEMENT

மதுபோதையில்  மனைவி வெட்டி கொலை!

10:03 AM Jun 10, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

கணவன், மனைவிக்கிடையே நடைப்பெற்ற குடும்பத் தகராறு காரணமாக மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்று விட்டு தப்பித்துள்ளார் கணவர். பரப்பரப்பை ஏற்பட்ட இச்சம்பவத்தில் கொலையாளியான கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயப்புரம் தாலுகா நடுவப்பட்டி கிராமம் ஆறுமுக முதலியார் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கறிக்கடையில் வேலைப் பார்க்கும் இவருக்கு முனீஸ்வரி என்கின்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமையன்று மாலைவேளையில், மிகுந்த மதுபோதையில் வீட்டிற்கு வந்த இவருக்கும், இவருடைய மனைவி முனீஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமுற்ற கருப்பசாமி அரிவாளால் மனைவியை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி முனீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த எட்டயபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையான உடலைக் கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்கள், ழக்குப்பதிவு செய்து கொலைக்குற்றவாளியை தேடி வருகின்றனர். மதுபோதையில் மனைவியை கொன்ற சம்பவத்தால் அப்பகுதியே பரப்பரப்புக்குள்ளானது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT