ADVERTISEMENT
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
ஈரோட்டில் 1 வாக்குசாவடியிலும் கடலூரில் 1 வாக்குசாவடியிலும், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூரில் 1 வாக்குசாவடி்யிலும், தேனியில் 2 வாக்குசாவடிகளும் மறு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு விவகாரங்களால் தமிழகத்தில் 46 வாக்குசாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேணடியிருக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருந்தார். இந்நிலையில், 13 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
Show comments