ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு; அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

07:07 PM May 30, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மாநிலத்தில் பெருகி வரும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயத்தை கண்டித்து இன்று நடைபெற்ற ஈரோடு மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து சூரம்பட்டி ஜெகதீசன் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்தனர்.

பேரவைக் கூட்டத்தில் இந்தப் பிரச்சனையை எழுப்பியபோது, திமுக ஆட்சி பற்றி அவதூறாகக் குறிப்பிட்டதற்கு திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது திமுக உறுப்பினர்களின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவினர் தங்களை மிரட்டியதாகவும், திட்டியதாகவும் செய்தியாளர்களிடம் அதிமுக உறுப்பினர்கள் புகார் செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT