Skip to main content

வைகோவின் பிடிவாதம் - ஈரோடு திமுகவினர்  குமுறல்

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

 

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. ம.தி.மு.க.வின் மாநில பொருளாளராக உள்ள கணேசமூர்த்தி தான் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எதிரணியான  அ.தி.மு.க.வில் வெங்கு என்கிற மணிமாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

v


 இந்நிலையில் ம.தி.மு.க. வேட்பாளர் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார். ம.தி.மு.க.விற்கு ஏற்கனவே இருந்த பம்பரம் சின்னம் இல்லை என்ற நிலை வந்த போதே, ஈரோடு திமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் வேட்பாளர் கணேசமூர்த்தியை சந்தித்து நீங்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள். தனியாக சுயேச்சை சின்னம் என்றால் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வது மிகுந்த சிரமம். மேலும் அ.தி.மு.க. மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை இப்போது நமது கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. இந்த நிலையில் நம்மை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க. இரட்டை இலையில் நிற்கிறது.

 

மக்களின் எதிர்ப்பு ஓட்டுக்கள் நமது கூட்டணிக்கு அப்படியே வரவேண்டும் என்றால்  சின்னம் முக்கியம். இரட்டை இலைக்கு எதிராக எந்த சின்னம் இருக்கிறது என்று மக்கள் தேடிப் பார்க்கும் போது ஏற்கனவே அறிமுகமான சின்னமாக இருக்க வேண்டும். அதன்படி உங்களின் பம்பரம் சின்னம் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்கு அடுத்தபடியாக உதயசூரியன் சின்னம் என்றால் நாம் வெற்றியை சுலபமாகப் பெறலாம். தனி சின்னம் என்று சுயேச்சை சின்னத்தில் நின்றால்  வெற்றி என்பது மிகுந்த சிரமம். இதை  மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியிடம் விரிவாக விளக்கியதோடு, திமுக தலைமையிடமும் இந்த கருத்தை கொண்டு கொண்டுசென்றனர்.


 திமுக தலைமையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அழைத்து ஈரோடு தொகுதியில் உள்ள நிலவரத்தை சொல்லி உதயசூரியன் சின்னத்தில் நிற்க முடியுமா என்பதை யோசியுங்கள். வெற்றிதான் முக்கியம் என கூறியுள்ளார்கள். ஆனால் மதிமுகவில் உள்ள சில நிர்வாகிகள்  திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு விரும்பவில்லை.  இதனால் தனி சின்னம் தான் என்ற முடிவை எடுத்து வைகோவும் அறிவித்துவிட்டார்.

 

இந்த அறிவிப்பு ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினரை  அதிர்ச்சியடைய செய்துள்ளது. தேர்தல் மிகக் குறுகிய நாட்களே உள்ளதால் மதிமுக வாங்கும் சுயேச்சை சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியாது என்பதோடு பாராளுமன்ற தொகுதியில் மதிமுகவுக்கு பல பூத்களில் தொண்டர்களே இல்லை என்பதால் மதிமுகவுக்கு வழங்கப்படுகிற சின்னத்தை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தான் மக்களிடம் கொண்டு சென்று அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் தி.மு.க.நிர்வாகிகள் தொண்டர்களிடையே சோர்வும் குமுறலும் ஏற்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்