ADVERTISEMENT
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பி.கந்தசாமி ஐபிஎஸ்க்கு பிரிவு உபசார விழா இன்று (29.04.2023) எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பூங்கொத்து மற்றும் நினைவுப்பரிசு வழங்கி டிஜிபி கந்தசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். விழாவில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை இயக்குநர் ரவி மற்றும் பாண்டிச்சேரி டிஜிபி மனோஜ் குமார் லால், டிஜிபி கந்தசாமி மனைவி செல்வி மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு மனைவி சோபியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments