ADVERTISEMENT
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு சில மாவட்டங்களில் தினசரி காரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் சிகிச்சைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு சார்பில் கரோனா சிறப்பு வார்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மேல் தளத்தில் பந்தல் அமைத்து 100க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
ADVERTISEMENT
Show comments