ADVERTISEMENT

திராவிடர் கழக மாநில பொருளாளர் பிறைநுதல் செல்வி விபத்தில் மரணம்!!

12:04 PM Dec 05, 2018 | arulkumar

திராவிடர் கழக மாநிலப் பொருளாளராக இருந்தவர் டாகடர் பிறைநுதல் செல்வி .72 வயதான இவர் தன் கணவர் கவுதமனுடன் குன்னூரில் வசித்து வந்தார் .இவர் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு திருப்பூருக்கு வந்தார் , பின்னர் அங்கிருந்து காரில் குன்னூருக்கு வந்து கொண்டிருந்த பிறைநுதல் செல்வியின் கார் மீது காட்டேரிப் பகுதியில் எதிரே வேகமாய் வந்த கார் ஒன்று மோதியது .

ADVERTISEMENT

ADVERTISEMENT

மோதிய வேகத்தில் காரில் பிறைநுதல் செல்வி அணிந்திருந்த சீட் பெல்ட் கொக்கி அவரது வயிற்றில் குத்த காயம் ஏற்பட்டது. பின்னர் குன்னூர் தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்[பட்டது . ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் . பிறைநுதல் செல்விக்கு இனியன் என்ற மகனும் , யாழிசை என்ற மகளும் இருக்கின்றனர்.

.

ஈரோட்டைச் சேர்ந்த இவர் 22 ஆண்டு காலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவராகவும், கோத்தகிரி தலைமை ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டராகவும் , மாவட்ட சுகாதார இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பிறைநுதல் செல்வி .


அவரது உடல் குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப் பட்டிருக்கிறது .

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT