Skip to main content

வயிற்றுப் பிழைப்புக்காக ‘ரிஸ்க்’ எடுக்கிறார்கள்! -பட்டாசு வெடிவிபத்தில் இருவர் பலி!

Published on 31/05/2019 | Edited on 31/05/2019


சுந்தர்ராஜுவுக்கும் முருகேசனுக்கும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று  தெரியாது. வழக்கம் போலவே, பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மிகவும்  ‘ரிஸ்க்’ ஆன இந்தத் தொழிலை வயிற்றுப் பிழைப்புக்காகப் பார்த்து வந்தனர். அத்தொழில் அதன் வீரியத்தை நேற்று (30-5-2019) காட்டிவிட்டது. அதனால், அவ்விருவரும் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி, உடல் சிதறி உயிரைவிட்டனர். 

 

 'Risk' for stomach survival! Two killed in crack blast

 

சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான நயா கார்னேசன் பட்டாசு ஆலை, சாத்தூர் தாலுகா - துலுக்கன்குறிச்சியில் இயங்கி வருகிறது. இங்கு 70-க்கும் மேற்பட்ட அறைகளில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மையார்பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜுவும், துலுக்கன்குறிச்சியைச் சேர்ந்த முருகேசனும் 69-ஆம் நம்பர் அறையில், அணுகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான மருந்தினைக் கலக்கும் பணியைச் செய்தனர். அப்போது, உராய்வின் காரணமாக திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. அதனால்,  இருவரும் உடல் கருகி, வெவ்வேறு இடங்களில் உடல் சிதறி, இறந்து போனார்கள். 

 

 'Risk' for stomach survival! crack blast in sivakasi


வழக்கம்போல், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, மேலும் தீயைப் பரவவிடாமல் அணைத்தனர். வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து, பட்டாசு ஆலை மேலாளர் மற்றும் போர்மேன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

 

 

 

 'Risk' for stomach survival! crack blast in sivakasi

  

விதிமீறல் சாலை விபத்துக்களைப் போலவே பட்டாசு ஆலை விபத்துகளும் சர்வ சாதாரணமாக அடிக்கடி நடக்கின்றன. தொழிலாளர்களின் உயிர்களும் பறிபோகின்றன. சட்டம் தன் கடமையை இங்கு சரிவரச் செய்வதில்லை. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்காததும் விபத்துக்கு வழிவகுக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.