Skip to main content

தமிழ்நாட்டில் புதிய மாநகராட்சிகளை உருவாக்க  திமுக அரசு திட்டம்! 

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

DMK to create new corporations in Tamil Nadu Government program!

 

தமிழ்நாட்டில் தற்போது சென்னை, ஆவடி, வேலூர், ஓசூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோயில் ஆகிய 15 மாநகராட்சிகள் உள்ளன. இதில், சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சியாக இருக்கிறது. 

 

அண்மையில், தமிழ்நாட்டிலுள்ள 50க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தும் முடிவுகளை எடுத்திருக்கிறது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. இந்நிலையில், புதிதாக 3 மாநகராட்சிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. 

 

அந்த 3 மாநகராட்சிகளையும் வட தமிழ்நாட்டில் உருவாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 3 நகராட்சிகளே மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

வட தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமூகத்தின் ஆதரவை முழுமையாக பெறுகிற திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த மாநகராட்சிகள் உருவாக்கப்படுகின்றன. அப்படி உருவாகும்பட்சத்தில் பாமகவின் அரசியல் செல்வாக்கினைக் குறைக்க முடியும் என்றும் திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. 

 

இதற்கிடையே, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மட்டும் நிலுவையில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டு, அதற்கான தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு கட்டமாக, உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

 

நிலுவையிலுள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்தி முடித்துவிட்டு, புதிதாக உருவாக்கப்படும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை இந்த வருடத்தின் இறுதியில் நடத்தவும் திமுக அரசு ஆலோசித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.