ADVERTISEMENT

விவசாயப் போராட்டங்களை ஆதரித்து தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம்..! (படங்கள்)

04:28 PM Dec 08, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 13வது நாளாக, இன்றும் (08.12.2020) விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று, விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நாடுமுழுவதும் மறியல் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

ADVERTISEMENT

சென்னை, மகாகவி பாரதியார் நகரில் உள்ள அம்பேத்கர் கலைக் கல்லூரி எதிரில், டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT