இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகளும் விவசாய கடன் தள்ளுபடியை வலியுறுத்தி கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இன்னும் சற்று நேரத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.