ADVERTISEMENT

பாலியல் வன்கொடுமை: இரண்டு வெவ்வேறு வழக்குகளில் தீர்ப்பு!

08:04 PM Sep 11, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் இருவேறு போக்ஸோ வழக்குகளில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு 44 ஆண்டு மற்றும் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2019- ஆம் ஆண்டில் 11- ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக பிரசாத் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதேபோல், மற்றொரு 11- ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை வன்கொடுமை செய்ததாக மாசித்துரை என்பவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த இரண்டு வழக்குகள் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பிரசாத்துக்கு 47 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 50,000 அபராதமும், மாசித்துரைக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT