ADVERTISEMENT

குடும்ப தகராறில் அண்ணனை குத்திக் கொன்ற தம்பி! திண்டுக்கல்லில் பரபரப்பு!!

03:42 PM Aug 07, 2019 | Anonymous (not verified)

திண்டுக்கல்லில் குடும்ப தகராறில் அண்ணனை தம்பியை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் முத்தழகுபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த இஸ்ரவேல் ராஜா. இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில வருடங்களாக குடும்பத்துடன் இஸ்ரவேல் ராஜா திருச்சியில் தங்கி சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் தான் முத்தழகுபட்டி செபஸ்தியார் கோவில் திருவிழா நடந்து வருவதால் அதற்காக நேற்று குடும்பத்துடன் ஊருக்கு வந்தார்.

அப்பொழுது முத்தழகு பட்டியில் தம்பி விஜி என்ற சிங்கராயன் குடும்பத்துடன் வசித்து வருகிறார் அவருடன் தாயாரும் வசித்து வருகிறார் இந்த நிலையில்தான் திருவிழாவுக்கு வந்த சமயத்தில் இஸ்ரவேல் ராஜாவுக்கு சிங்கராயன் குடும்பத்துடன் தகராறு ஏற்பட்டது பின்னர் அவர்களது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில்தான் இன்று காலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிங்கராயன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன் என்றும் பாராமல் இஸ்ரவேல் ராஜாவை பல இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் இஸ்ரவேல் ராஜா அதே இடத்தில் துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். கீழே விழுந்து இருந்தால் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகே இருந்த உறவினர்கள் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு இஸ்ரவேல் ராஜாவை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இஸ்ரவேல் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவிழாவுக்கு வந்த சமயத்தில் அண்ணணை தம்பி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT