Skip to main content

“கிராமங்களில் விளையாடும் மாணவன்தான் ஒலிம்பிக் போட்டியில் உயர்வு பெறுகிறான்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

"It is the student who plays in the villages who gets promoted in the Olympics" - Minister I. Periyasamy

 

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் இணைந்து தமிழகத்தில் முதன்முறையாக நடத்திய கிராம அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கொத்தப்புள்ளி ஊராட்சியில் நடைபெற்றது.

 

10 வயதிற்கு மேல் வயது வரம்பில்லாமல் அனைவரும் கலந்து கொள்ளும் இந்த மினி மாரத்தான் போட்டி கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புபட்டியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் தொடங்கியது. போட்டியை ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி அன்பரசு, செந்தில் கிரசர் உரிமையாளர் அன்பரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தோப்புபட்டியில் இருந்து புறப்பட்டு தோப்புபட்டி ரயில்வேகேட், வழியாக தோப்புபட்டி மேற்கு காலனி, கொத்தப்புள்ளி, ரெட்டியார்சத்திரம் ரயில்வேகேட், தாதன்கோட்டை, பொம்மனங்கோட்டை வழியாக வந்து நிறைவாக கதிரனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மைதானத்தை வந்தடைந்தனர். 

 

சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் கொத்தப்புள்ளி ஊராட்சியில் பல்துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா கதிரனம்பட்டியில் நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி அன்பரசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரெங்கசாமி வரவேற்று பேசினார். சி.பி.எம். கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, மாவட்ட தடகள சங்கத்தலைவர் துரை, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

"It is the student who plays in the villages who gets promoted in the Olympics" - Minister I. Periyasamy

 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் அன்பளிப்புத் தொகையும் சாதனையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். பின்பு பேசிய அவர், “தமிழகத்தில் முதல் முறையாக நகரங்களில் நடக்க கூடிய மாரத்தான் போட்டி குக்கிராமமான கொத்தப்புள்ளி ஊராட்சியில் நடைபெற்றுள்ளது. இதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி அன்பரசை மனதாரப் பாராட்டுகிறேன். விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தியதின் மூலம் திசைமாறிச் செல்லும் பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் தங்களுக்கு தெரிந்த உடற்பயிற்சியிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபடுவார்கள். 

 

தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி, தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் அனைத்து விளையாட்டுப் பயிற்சிகளையும் செய்யக்கூடிய விளையாட்டு அரங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் மாபெரும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. அதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு உருவாகுவர்.

 

சிறு கிராமங்களில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு தேர்ச்சி பெறும் மாணவன்தான் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் அளவிற்கு தகுதி பெறுகிறான். தமிழக அரசு இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதை இளைஞர்கள் பயன்படுத்தி தங்கள் கல்வி அறிவையும், வாழ்வாதாரத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவித நோயும் வராது. இதை உணர்ந்து ஆண், பெண் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். அடுத்த மாரத்தான் போட்டி மாபெரும் அளவில்; ஒன்றிய அளவில் நடத்தப்படும்” என்றார். 

 

மாரத்தான் போட்டியில் முதல் பரிசை பெற்ற லெயேந்தர் ஏசு, இரண்டாம் பரிசு பெற்ற அருண்சோவிட் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற மில்லர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு தலா, ரூ. 10,001, ரூ. 7,001, ரூ. 5,001 பணமுடிப்பையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார். அதன் பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. சி.பி.எம். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, இராணுவ மருத்துவமனை மருத்துவர் சுபாஸ்ரீ ஆகியோருக்கு சால்வை அணிவித்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். இதில் தாதன்கோட்டை ஆறுமுகம், புதுக்கோட்டை ரமேஷ் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.