Skip to main content

திண்டுக்கல் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கியது எப்படி! புதுமுக வேட்பாளரை இறக்கும் ஐ.பி!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் வேடசந்தூர் நீங்கலாக திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் கொண்டதுதான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி.
 
 
இத்தொகுதியில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக ஐ.பெரியசாமியும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினராக சக்கரபாணியும், பழனி சட்டமன்ற உறுப்பினராக செந்தில்குமாரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினராக ஆண்டி அம்பலம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கைப்பற்றி திண்டுக்கல் மாவட்டத்தை திமுக கோட்டையாக உருவாக்கி உள்ளனர்.
 
dmk

 

 
இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் திண்டுக்கல் தொகுதியை கேட்டு காங்கிரஸ் போராடி வந்தனர் அதிலேயும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் கார்த்தி சிதம்பரம், இளங்கோவன், குஷ்பு போன்ற முக்கிய தலைவர்கள் போட்டிபோட உள்ளனர் என்றும் பேச்சு பரவலாக எதிரொலித்து வந்தது. ஆனால் கழக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் இத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது திண்டுக்கல் மாவட்டத்தையே திமுக கோட்டையாக உருவாக்கி நான்கு சட்டமன்ற தொகுதிகளை தக்கவைத்து  வைத்திருக்கிறோம்  அப்படி இருக்கும்போது இத்தொகுதியை  திமுகவுக்குத்தான் ஒதுக்க  வேண்டுமென தலைவர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
 
dmk

 

 
 
அதன் அடிப்படையில்தான் திமுக-காங்கிரஸ் கூட்டணியின்  இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் திமுக தலைவர் ஸ்டாலினும் திண்டுக்கல் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க முடியாது திமுக தான் போட்டி போடும் என வெளிப்படையாகவே சொல்லி விட்டார். அதன் அடிப்படையில் தான் திண்டுக்கல் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதைக்கண்டு ஐ.பெரியசாமி, சக்கரபாணி, செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் ஆகிய நான்கு எம்எல்ஏக்களும் மாவட்ட பொறுப்பில் உள்ள சில  உபிகளும் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். இப்படி தலைவரிடமும், காங்கிரசுடனும் போராடி திண்டுக்கல் தொகுதியை திமுகவுக்கு கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி வாங்கி இருக்கிறார்.
 
       dmk

 

 
 
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 1952-ல் பாராளுமன்ற தொகுதி உருவான காலத்திலிருந்து 2019 வரை 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் 1967-ல் திமுக பாராளுமன்ற உறுப்பினராக அன்புச்செழியன் வெற்றி பெற்றிருக்கிறார் அதைதொடர்ந்து 1971-ல் ராஜாங்கமும் 1980-ல் மாயத்தேவர் என மூன்று முறை இத் தொகுதியை திமுக தக்கவைத்துள்ளது.
 
 
அதுபோல் காங்கிரசும் இத்தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளுடன் ஐந்து முறை வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி திமுக காங்கிரஸ் கூட்டணி இத்தொகுதியில் எட்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அளவுக்கு திமுகவின் செல்வாக்கை வைத்து காங்கிரசும் இத்தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் திமுக இத்தொகுதியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில்தான் காந்திராஜன் தோல்வியைத் தழுவினார். அதனாலதான் இந்த பாராளுமன்ற தேர்தலில் அவசியம் திமுக வெற்றி பெறும் என ஐ.பி. உள்பட மாவட்ட பொறுப்பாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் தான் திண்டுக்கல் தொகுதி திமுகவுக்கு  கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி திமுக கோட்டையாக உள்ள திண்டுக்கல் தொகுதியில் உடன்பிறப்புகள் போட்டி போடுவதற்காக முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், சாணார்பட்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயன், பழனி முன்னாள் சேர்மன் வேலுமணி உள்பட 20க்கும் மேற்பட்ட உ.பி.கள் சீட் கேட்டு விருப்பமனு தாக்கல் செய்து அதன் அடிப்படையில் நேர்காணலுக்கும் சென்றுவிட்டு வந்து இருக்கிறார்கள்.
 
dmk

 

இப்படி தலைவர் ஸ்டாலின் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்ட உடன்பிறப்புகள் அனைவருமே ஐபி ஆதரவாளர்கள் என்பதால்  சீட்டு வாங்குவதற்கும் போட்டி போட்டு வருகிறார்கள். இருந்தாலும் தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலை வாக்காள மக்களின் மனநிலையை பொறுத்து யாரை? நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என ஐ.பெரியசாமி தொடர்ந்து கட்சி மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மூலம் விருப்பமான  கட்டிய கட்சி பொறுப்பாளர்களில்  மேற்கு அல்லது கிழக்கு பகுதியில் உள்ள ஒரு உடன் பிறப்புக்கு  சீட்டுகொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும்  புதுமுகமான உடன் பிறப்பு அப்படிபட்ட புதுமுகம் வேட்பாளரைதான் ஐ.பி.தேர்தல் களத்தில் இறக்க தயாராகி வருகிறார் என்ற பேச்சும் பரவலாக எதிர்ஒலித்து வருகிறது. அதன் மூலம் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை திமுக கோட்டையாக உருவாக்க திமுக உடன்பிறப்புக்களும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள்.
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.