திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியர்களிடம் திவாகரன் பேசுகையில்
அண்ணா, எம்ஜிஆர், திராவிடம் இல்லாத அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சசிகலா உட்பட தொண்டர்கள் யாருக்கும் உடன்பாடு இல்லை. எல்லாம் திணிக்கப்பட்ட முடிவுகள். எடுக்கப்படும் முடிவுகள் எல்லாம் தனிப்பட்ட குடும்ப முடிவுகளாக இருக்கிறது. அவர்களின் செயல்பாடுகள் எல்லாம் ரகசியமாக இருக்கிறது எல்லாமே பேரத்தில் முடிகிறது. சசிகலா சொன்னாலும் நாங்கள் ஏற்றுகொள்ள தயாராக இல்லை, சசிகலாவிற்கே தினகரனின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை.
வெற்றிவேல் காங்கிரஸில் இருந்து வந்தவர் அவருக்கும் அதிமுகவிற்கும் தொடர்பே இல்லை ''ஊரு ரெண்டுபட்டால் கூத்தடிக்கு கொண்டாட்டமாம் '' என்பதை போலதான் அவர் இருக்கிறார். இன்று நிலைமையையே கெடுத்து அதிமுக தொண்டர்கள் அல்லோலப்பட காரணமானவர்களில் சிலர் உள்ளனர் அதில் வெற்றிவேலும் ஒருவர் எனக்கூறியுள்ளார்.