Skip to main content

எடப்பாடி தூக்கி எறிந்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

சசிகலா கொடுத்த அதிகாரப் பூர்வ கடிதத்தைத் தொடர்ந்தே கட்சிப் பதிவு நடந்ததாக, தங்க.தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் தெரிவித்திருந்தாலும், தினகரனின் இந்த நடவடிக்கை சசிகலா குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தன்னை முதல்வர் பதவியில் உட்கார வைத்த சசியின் படத்தை கட்சி அலுவலகத்திலிருந்து எடப்பாடி தூக்கி எறிந்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்கிறது மன்னார்குடி தரப்பு.

 

eps ops



சசிகலா சிறைக்கு போகும் முன் டாக்டர் வெங்கடேஷ், டி.டி.வி. தினகரன் ஆகிய சொந்தங்களை மட்டும் கட்சியில் சேர்த்தார். அதில் டாக்டர் வெங்கடேஷுக்கு எந்த பதவியையும் தினகரன் தரவில்லை. டி.டி.வி. தினகரனுக்கு அவரது மனைவி அனுராதாவும் பி.ஏ. ஜனாவும்தான் எல்லாம் என்கிறார்கள். செந்தில் பாலாஜி, நாஞ்சில் சம்பத், கலைராஜன் போன்றவர்கள் அ.ம.மு.க.வை விட்டு விலகினார்கள்; "தற்போது எனக்குதான் செல்வாக்கு சசிகலா செல்லாக் காசு' என தேர்தல் கமிஷன், கட்சிப் பதிவு என சசிகலாவையே நீக்கிவிட்டார். இதற்கு டி.டி.வி. தினகரன் ஒரு விலை கொடுக்க வேண்டி வரும் என அடித்துச் சொல்கிறார்கள் அவர்களின் சொந்தங்கள்.

 

sasi



தினகரனின் இந்த மூவை இரண்டு விதமாக வாதிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். "எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க., இனி எந்த காலத்திலும் டி.டி.வி. தினகரனை ஏற்காது என அறிவித்துவிட்டது. ஆனால் அவர்கள் சசிகலாவை எதிர்க்கவில்லை. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த எடப்பாடி எந்த இடத்திலும் சசிகலாவை தாக்கிப் பேசவில்லை. இது ஒரு சிக்னல்'' என்கிறவர்கள், மே மாதம் 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் ஒருவேளை எடப்பாடி அணிக்கு பாதகமாக வருமானால் அதற்கு            டி.டி.வி. அணி அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை உடைத்ததுதான் காரணமாக இருக்கக்கூடும். அதையடுத்து அணிகள் இணைப்பு, சசிகலா மீண்டும் பொதுச்செயலாளர் என்கிற நிலை உருவாகும். அதை முன்கூட்டியே கணித்துதான் சசிகலாவை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார் டி.டி.வி.'' என்கிறார்கள்.
 

sasi



"சசியை பொறுத்தவரை இதுவரை டி.டி.வி.யை பாசிட்டிவ் ஆகத்தான் பார்த்தார். ஆனால், தினகரனின் இந்த முடிவு சசிகலாவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுபற்றி காரசார அறிக்கை தர தயாரான தனது தம்பி திவாகரனிடம் "எதுவும் பேச வேண்டாம்' என உத்தரவிட்டுள்ளார் சசிகலா. பா.ஜ.க. எதிர்ப்பும் சாதி ஓட்டு களும்தான் தினகரனின் பலம். அதில் சாதி ஓட்டு சசிகலா நீக்கத்தால் தினகரனுக்கு விழாது. இது 4 தொகுதி சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படும். இனி அடுத்தது என்னவென்பதை இளவரசி மகன் விவேக்கும் அவருக்கு நெருக்கமான எடப்பாடி மகன் மிதுனும் முடிவு செய்வார்கள்'' என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.