தருமபுரியில் வேன் கவிழ்ந்து விபத்து: 17 பேர் காயம்
தருமபுரி மாவட்டம் தாசன்பைல் பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமயடைந்த 17 பேர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போல்மலை திம்மராயசாமி கோவிலில் தரிசனம் முடித்து திரும்பிய பக்தர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.