ADVERTISEMENT

மாற்றுதிறனாளி இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு... காவல்துறையினர் தீவிர விசாரணை!

11:41 PM Feb 26, 2020 | santhoshb@nakk…

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாலிஸ்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி ராகினி. இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு ராசாத்தி (26 வயது) பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் உள்ளார். இந்த நிலையில் புதன்கிழமை மதியம் கணவன், மனைவி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள அறையில் ராசாத்தி முகம் மற்றும் கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்துக்கு தகவல் தந்தனர்.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேத்தியாதோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றன.

ADVERTISEMENT

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் சேத்தியாதோப்பு பகுதியைச் சேர்ந்த ராசாத்திக்கு நெருங்கிய அண்ணன் உறவு முறை கொண்ட 29 வயதுடைய இளைஞர் தகாத காதல் உறவு வைத்துக்கொண்டு இவருடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ராசாத்தி அந்த இளைஞரை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையின் வட்டார தகவலாக உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT