ரெட்டேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்தவனின் வீடியோ பதிவு நாராயண பெருமாளிடம் காண்பிக்கப்பட்டது. தனது பிறப்பு உறுப்பை அறுத்தது அவன்தான் என்பதை நாராயண பெருமாள் உறுதி செய்யவே அந்த நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.
இதையடுத்து அந்தநபர் வில்லிவாக்கத்தில் மீன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை வடக்கு மண்டலம் கூடுதல் ஆணையர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,
சென்னை ரெட்டேரி பாலத்தின் பக்கத்தில் அஸ்லம் பாஷா என்பவர் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு சீரியசான கண்டிஷனரில் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனார். இந்த மாதம் இரண்டாம் தேதி மீண்டும் ஒருத்தர் நாராயண பெருமாள் என்பவர் அதேபோல் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு ஹாஸ்ப்பிட்டலில் இருந்தாரு அவரும் முதலில் விசாரிக்கும் பொழுது இது தெரியாமல் பட்டது நானே செய்து கொண்டேன் என்று வெளியே செல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டார். காவல்துறை விசாரிக்கும் பொழுது ஒருவன் ஓரினச் சேர்க்கையின் போது கட் பண்ணிவிட்டான் என்று சொன்னாரு. அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆய்வு செய்ததில் ஒரே நபர்தான் இந்த இரண்டு வழக்குகளும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அந்த சைக்கோ கொலைகாரனை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவன் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த முனியசாமி என்பதும், அவனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையில் குடிபோதையில் இருந்த அஸ்லம் பாஷா மற்றும் நாராயண பெருமாள் ஆகிய இருவருடனும் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி ஈடுபட்டதாகவும், சரியாக ஒத்துழைக்காத காரணத்தால் அவர்களின் பிறப்புறுப்புகளை அறுத்துவிட்டதாகவும் வாக்குமூலம் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல் நபரின் பிறப்புறுப்பை பிளேடாலும், இரண்டாவது சம்பவத்தின்போது நாராயணப் பெருமாளின் பிறப்புறுப்பை உடைந்த கண்ணாடி துண்டினால் அறுத்ததாகவும் முனியசாமி ஒப்புக்கொண்டுள்ளான். டாஸ்மாக்கில் மது அருந்துவோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் தனக்கு லிப்ட் கொடுப்பவர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைப்பதை வாடிக்கையாக வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அவனிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.