Skip to main content

டியூசனுக்கு வந்த மாணவிகளை காதலனுக்கு இரையாக்கிய டியூசன் டீச்சர் கைது!-விசாரணையில் திடுக் 

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

சென்னையில் மாலை நேர டியூசனுக்கு சென்ற மாணவிகளுக்கு டியூசன் டீச்சரின் காதலன் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதற்கு டியூசன் டீச்சரும்  உடந்தையாக இருந்தது தெரியவந்து தற்போது இருவரும் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

police action

 

சென்னை தியாகராயநகரில் சஞ்சனா என்பவர் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார். சஞ்சனாவிடம் டியூஷன் பயின்று வந்த மாணவியின் பெற்றோர் ஒருவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில் தனது மகள் செல்லும் டியூஷன் சென்டருக்கு எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் பாலாஜி என்ற ஒருவன் தனது மகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கண்ணீரோடு குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் உடனடியாக மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக இது தொடர்பான விசாரணையில் இறங்கினார்.

புகாரில் குறிப்பிட்டபடி மாணவியை கொடுந்துயருக்கு உள்ளாக்கிய பாலாஜியை கைது செய்தனர். பாலாஜியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாலை நேர டியூஷன் சென்டர் நடத்தி வந்த சஞ்சனாவும் இந்த பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து உடனே டியூஷன் சென்டர் நடத்தி வந்த சஞ்சனாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர்கள் இருவர் மீதும் வன்புணர்ச்சியில் ஈடுபடுதல், பாலியல் வன்கொடுமை, மிரட்டி வழிப்பறி செய்தல், மரண பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

police action

 

டியூசன் டீச்சர் சஞ்சனாவிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கைதான பாலாஜியும் தானும் காதலித்து வந்ததாகவும், திடீரென பாலாஜி  தன்னை ஒதுக்கியதாக கூறிய சஞ்சனா, தன்னை காதலிக்க வேண்டும் என்றால் தான் என்ன செய்ய வேண்டும் என பாலாஜியிடம் கேட்டேன். அதற்கு பாலாஜி உனது டியூசன் சென்டரில் படிக்கும் மாணவிகளை எனக்கு நெருங்கிப் பழகும் வகையில் என்னை அறிமுகப்படுத்தி வை என்று தன்னிடம் கூறினான் என விசாரணையில் சஞ்சனா கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 

அதேபோல் மாணவி ஒருவரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு பங்களாவிற்கு சஞ்சனா பாலாஜி அழைத்துச் சென்று அந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து அந்த மாணவியிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாக சஞ்சனா கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டியூசன் சென்டரில் படித்த மாணவிகள் மட்டும் அல்லாது வேறு சில மாணவிகளிடமும்  பாலாஜி அத்துமீறி இதுபோல் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தது சஞ்சானவிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.