Skip to main content

கஞ்சா போதையில் 65 வயது மூதாட்டிக்கு பாலியல் அத்துமீறல்; 17 வயது சிறுவர்களை தேடும் போலீசார்

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

சென்னை வியாசர்பாடியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் மூன்று பேர் சேர்ந்து கத்திமுனையில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 Sexual Abuse for a 65-year-old woman ;The police looking for 17-year-old boys

 

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. அங்கு வீடுகள் இல்லாத குடும்பங்கள் சிலர்  குடிசையில் வசித்து வருகின்றனர்.  குடிசைப்பகுதியில் 65 வயதான மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கஞ்சா போதையில் 17 வயதுடைய சிறுவர்கள் 3 பேர் அந்தக் குடிசைக்குள் புகுந்துள்ளனர்.  அந்த குடிசையிலிருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது கத்தியுடன் வெளியே சென்ற அந்த சிறுவர்கள் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுமதி என்பவர் கூறுகையில்,

 

ஒரு வயதான மூதாட்டியை 15 வயது பையன் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை சொல்வதற்கு அந்த மூதாட்டி பயந்துகொண்டு சொன்னார். எங்களுக்கே கேட்க அதிர்ச்சியாகவும், கஷ்டமாகவும் இருந்தது. பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு நாங்கள் இங்கே வெளியே வரவே பயமாக இருக்கிறது என கூறினார்.

 

இந்நிலையில் அந்த மூன்று பேரில் ஒரு சிறுவன் தற்போது பிடிபட்டுள்ள நிலையில் மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

police

 

மூதாட்டி வசித்து வரும் குடிசைக்கு அருகே சென்னை மாநகராட்சி கட்டிடம் துறையின் சமூக நலக்கூடம் உள்ளது.  பாதுகாவலர்களோ போலீசார் கண்காணிப்போ இல்லாத இந்த சமூக நலக்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 மது, கஞ்சா  உள்ளிட்ட போதை வஸ்துக்கள் பரிமாறிக் கொள்ளும் இடமாக இந்த சமூக நலக்கூடம் இருப்பதாகவும், அங்கு கஞ்சா மற்றும் போதை ஏற்றிக் கொள்ளும் சிறுவர்கள் குடிசைப்பகுதியில் வந்து அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி பெண்கள் முறையிட்டுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.