சென்னை வியாசர்பாடியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் மூன்று பேர் சேர்ந்து கத்திமுனையில் 65 வயது மதிக்கத்தக்கமூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

 Sexual Abuse for a 65-year-old woman ;The police looking for 17-year-old boys

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. அங்கு வீடுகள் இல்லாத குடும்பங்கள் சிலர்குடிசையில் வசித்து வருகின்றனர். குடிசைப்பகுதியில் 65 வயதான மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கஞ்சா போதையில் 17 வயதுடைய சிறுவர்கள் 3 பேர் அந்தக் குடிசைக்குள் புகுந்துள்ளனர். அந்த குடிசையிலிருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது கத்தியுடன் வெளியே சென்ற அந்த சிறுவர்கள் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுமதி என்பவர் கூறுகையில்,

ஒரு வயதான மூதாட்டியை15 வயது பையன் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை சொல்வதற்கு அந்த மூதாட்டி பயந்துகொண்டுசொன்னார். எங்களுக்கே கேட்க அதிர்ச்சியாகவும், கஷ்டமாகவும் இருந்தது. பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு நாங்கள் இங்கே வெளியே வரவே பயமாக இருக்கிறதுஎன கூறினார்.

Advertisment

இந்நிலையில் அந்த மூன்று பேரில் ஒரு சிறுவன் தற்போது பிடிபட்டுள்ள நிலையில் மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

police

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மூதாட்டி வசித்து வரும் குடிசைக்கு அருகே சென்னை மாநகராட்சி கட்டிடம் துறையின் சமூக நலக்கூடம் உள்ளது.பாதுகாவலர்களோ போலீசார் கண்காணிப்போ இல்லாத இந்த சமூக நலக்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மது, கஞ்சாஉள்ளிட்ட போதை வஸ்துக்கள் பரிமாறிக் கொள்ளும் இடமாக இந்த சமூக நலக்கூடம் இருப்பதாகவும், அங்கு கஞ்சா மற்றும் போதை ஏற்றிக் கொள்ளும் சிறுவர்கள் குடிசைப்பகுதியில் வந்து அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி பெண்கள் முறையிட்டுள்ளனர்.