ADVERTISEMENT

நடிகர் விஜய் மீது பரபரப்பு புகார்!

09:43 AM Jun 26, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அண்மையில் இப்படத்தின் பாடல் காட்சி பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி இணைய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பாடலில் விஜய் வாயில் சிகரெட்டுடனும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து இந்த பாடலுக்கு எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் விஜய் வாயில் சிகரெட்டுடன் இருந்ததைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் சமீபத்தில் வெளியான நா ரெடி பாடல் முழுவதும் சிகரெட்டுடன் விஜய் தோன்றியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் என்பவர், போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் நா ரெடி பாடல் உள்ளதாகப் புகாரில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT