Skip to main content

ரஜினி மற்றும் விஜயை டார்கெட் செய்வது ஏன்? பெரும் பரபரப்பை ஏற்படுத்த போகும் சம்பவம்!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

ரஜினி மீதான வருமானவரித்துறை வழக்கில் ஒருநிலையும், விஜய் மீதான வருமானவரி ரெய்டில் இன்னொரு நிலையும் எடுக்கப்படுவதாக விமர்சனம் எழுந்து வருவதாக கூறுகின்றனர்.  இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விசாரிக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசா ரணை பற்றித்தான் இருப்பதாக கூறுகின்றனர். 2018, மே 22-ந் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்களை ஒடுக்குவதற்காக, அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய போலீஸ், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர்களில் 13 உயிர்களை பறித்தது. இந்த விவகாரம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அப்போது பதற வைத்தது. அந்த நேரத்தில் அது பற்றி கருத்து கூறிய ரஜினி, அந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள். 
 

rajini



அதனால் தான் வன்முறை வெடித்தது. போலீஸாரைத் தாக்கியவர்களை அடையாளம் காண வேண்டும் என்று ஆவேசப்பட்டார். ரஜினியின் இந்தக் கருத்து அந்த சமயத்திலேயே மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி, பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியது. இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், ரஜினியின் அந்தக் கருத்து பற்றி அவரிடமே விசாரிக்க முடிவெடுத்திருப்பதாக சொல்கின்றனர். அதன்படி 25-ந் தேதி ஆஜராகுமாறு ரஜினிக்கு சம்மன் அனுப்பி, அவர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர். 


இதனையடுத்து இந்த விவகாரத்தை எப்படி அணுக வேண்டும் என்று ரஜினி தன் வழக்கறிஞர்கள் டீமிடம் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக சொல்கின்றனர். பொதுப் பிரச்சினையில் கருத்து சொன்னதற்கு  ஒருவருக்கு சம்மன் அனுப்ப முடியாது என்று ரஜினியின் சட்ட ஆலோசனை டீமில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒருவேளை இந்த கமிஷனில் ரஜினி ஆஜராக நேர்ந்தால், அப்போது அவருக்காக ஆஜராவதற்கு 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறார் என்கின்றனர். கடந்த 6-ந் தேதிவரை இதற்கான சம்மன் ரஜினிக்குக் கிடைக்கவில்லை. சம்மன் கிடைத்து, ரஜினி ஆஜரானால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு பலதரப்பிலும் ஏற்பட்டிருப்பதாக சொல்கின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.