ADVERTISEMENT

உடைந்த பாலம்; விபத்தில் சிக்கிய லாரி!

03:46 PM Apr 27, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சியில் வாய்க்கால் பாலம் உடைந்து லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அண்ணாநகரில், வாய்க்காலை வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்ல பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கான்கிரீட் பாலத்தில் கிராவல் மண் ஏற்றிய லாரி ஒன்று இன்று காலை கடந்து செல்ல முயன்றது.

அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் தரைதளம் உடைந்தது. உடைந்த பகுதியில் லாரியின் பின் சக்கரம் சிக்கிக்கொண்டது. பாரம் தாங்காமல் பாலம் உடைந்ததாகக் கூறப்படுகிறது. பிரதான சாலையில் பாலம் உடைந்து லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT