ADVERTISEMENT

கோவை கார் வெடிப்பு சம்பவம் - 6 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

07:50 AM Nov 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், என்.ஐ.ஏ. எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதில் கைது செய்யப்பட்ட 6 பேரும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் முகமது ரியாஸ், முகமது தல்கா, முகமது நவாப் இஸ்மாயில், முகமது அசாருதீன், ஃபிரோஸ் இஸ்மாயில் உள்ளிட்ட ஆறு பேரும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆறு பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி வரை 6 பேரையும் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT