Skip to main content

பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளது; என்.ஐ.ஏவிற்கு தமிழக போலீஸ் ஒத்துழைக்கும் - டிஜிபி பேட்டி

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

Various sources available; Tamil Nadu police cooperating with NIA-DGP interview

 

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

Various sources available; Tamil Nadu police cooperating with NIA-DGP interview

 

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை தமிழக டிஜிபி செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துக்களை தெரிவித்த நிலையில், தற்போது கோவையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இருந்தனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ''அசிஸ்டன்ட் கமிஷனர் போலீஸ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு சம்பவ இடத்திற்கு உடனே சென்று பாதுகாப்பாக வைத்து அதன் பிறகு இந்த குறிப்பிட்ட நபர் யார் என்பதை கார் மூலமாக கண்டுபிடித்து இன்றோடு சேர்த்து 6 குற்றவாளிகளை  இந்த வழக்கில் மிகத் துரிதமாக கைது செய்துள்ளார்கள். இதற்கான எல்லா ஆதாரங்களையும் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பே ஐந்து பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இரண்டு நாள் விசாரணையில் இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதில் ஆறாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

Various sources available; Tamil Nadu police cooperating with NIA-DGP interview

 

குறுகிய காலத்தில் இதுபோன்ற வழக்கில் துப்புத்துலக்கி குற்றவாளிகளை கைது செய்து ஆதாரங்களைத் திரட்டிய கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், அவரைச் சேர்ந்த மற்ற அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வெகுமதிகள் கொடுத்திருக்கிறோம். தமிழக முதல்வர் இந்த வழக்கை என்.ஐ.ஏ விற்கு பரிந்துரை செய்யலாம் என தெரிவித்திருக்கிறார். இன்று உள்துறை செயலகம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு கொடுப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். அதனடிப்படையில் கமிஷனரும்,என்.ஐ.ஏ அதிகாரிகளும் வந்துள்ளார்கள். அவர்களுடன் சேர்ந்து நாங்கள் ஒரு மீட்டிங் நடத்தினோம். மேற்கொண்டு இந்த வழக்கை அவர்கள்(என்.ஐ.ஏ) எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் நமது தமிழக காவல்துறை செய்து கொடுக்கும். புலன் விசாரணை பற்றிய எல்லா விவரங்களையும் சொல்ல முடியாது. மொபைல் உள்ளிட்ட இந்த வழக்கில் கிடைக்கப்பெற்ற எல்லா ஆதாரங்களையும் என்.ஐ.ஏ விற்கு நாம் ஒப்படைப்போம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.