கஜா புயல் தாக்கத்தில் 6 மாவட்டங்களில் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசு இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ADVERTISEMENT
நல்லப் பெயர் எடுத்தால் போதும், தற்போதைக்கு தென்னங்கன்றுகளை கொடுத்து விவசாயிகளை அமைதிப்படுத்துவோம் என்று நினைத்த அரசு வேளாண்மைத்துறை மூலம் தனியாரிடம் கொள்முதலில் ஈடுபட்டுள்ளது.
ADVERTISEMENT
வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மருமகன் கனகதாரண், தென்னங்கன்றுகள் கொள்முதலில் தீவிரம் காட்டியுள்ளார். தனியாரிடம் கொள்முதல் செய்யப்படும் தென்னங்கன்றுகளுக்கு குறிப்பிட்ட ரூபாயை கமிஷனாக பெறுகிறாராம். கமிஷன்தான் கொடுக்கிறோமே என்று தங்களிடம் நாளாகிப்போன, தரமில்லாத கன்றுகளையும் அரசுக்கு சப்ளை செய்து வருகிறார்கள் வியாபாரிகள்.
Show comments