Skip to main content

எதற்கு முதலமைச்சர், எதற்கு மாநில பட்ஜெட், எதற்கு மாநில செயலாளர் - அன்புமணி ராமதாஸ்

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பு சார்பில் ‘அன்புமணியிடம் கேளுங்கள்’ என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தினார்கள்.  அதில் தகவல் தொழிநுட்பத் துறையில் இருக்கும் ஜுனியர் முதல் சீனியர்கள் வரை பங்கு கொண்டார்கள் அதில் ஒரு இளைஞர், “கஜா புயலுக்கு நிவாரனம் அனுப்பிய அனைவரும் அவர்களின் அடையாளத்தை ஒட்டி அனுப்பினார்கள். ஆனால் நீங்கள் மட்டும்தான் அதில் இருக்கும் காலாவதி தேதியை சோதித்து அனுப்பினீர்கள் அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதே சமயம் கஜா புயல், மின்சாரத்துறை, சுகாதாரத்துறை மற்றும் வேளாண் துறை எப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கிறது” என்ற அந்த இளைஞரின் கருத்திற்கு அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்து பேசினார்.

 

 

aa

 

ஒக்கி, வரதா, தானே, கஜா என்று எந்தப் புயலிலும் அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இதைவிட பெரிய புயல்களெல்லாம் இனிவரும் காலங்களில், புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் வரும். அதனை எல்லாம் எவ்வறு சமாளிக்கப்போகிறோம் என்பதைப் பற்றிய திட்டங்கள் வேண்டும். 

 

நான் பேசிக்கொண்டிருக்கும் இன்று புயல் வந்து எட்டாவது நாள், இன்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களில் குழந்தைகளுக்கு பால், மின்சாரம், உணவு, தண்ணீர், வீடு போன்ற அதியாவிசிய பொருட்கள் எதுவும் இல்லை. இன்றுவரையும் முகாம்களில்தான் தங்கியிருக்கிறார்கள். இங்கு என்ன நிர்வாகம் நடக்கிறது. மத்திய அரசு நிதி கொடுத்தால்தான் உதவிகள் செய்யமுடியும் என்றால், எதற்கு மாநில அரசு, எதற்கு முதலமைச்சர், எதற்கு மாநில பட்ஜெட், எதற்கு மாநில செயலாளர். நான் முதலமைச்சராக இருந்திருந்தால் ஏழு நாட்களும் அங்கேயே தங்கி பணிகள் எப்படி நடக்கிறது என்பதை பார்வியிட்டிருப்பேன் அப்போதுதான் மற்ற அதிகாரிகள் எல்லாம் வந்திருப்பார்கள். அதுதான் தலைமை பண்பு. உதாரணத்திற்கு கேரளாவில் வெள்ளம் வந்தபோது அந்த மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அங்கே இருந்து, இதுதான் தலைமை பண்பு என்று காட்டினார். 

 

 

a

 

 

2005-ம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை கொண்டுவந்தோம். அதன்படி தேசிய பேரிடர் மேலாண்மை என்பதை அமைந்தது. அதற்கு தலைவர் பிரதமர் என்றும், மாநில பேரிடர் மேலாண்மைக்கு மாநில முதல்வர், மாவட்ட பேரிடர் மேலாண்மைக்கு மாவட்ட ஆட்சியர் என்று தலைவர்கள் இருக்கிறார்கள். என் கேள்வி, இவர்களெல்லாம் என்ன செய்தார்கள். இதுவெல்லாம்விட புயலால் பாதிக்கப்பட்டுள் தென்னை மரங்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ 600 அறிவித்திருக்கிறார்கள். ஆனால், சென்னை சேலம் எட்டு வழி சாலையில் உள்ள தென்னை மரங்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ 50,000 வரை தருவதற்கு தயாராக இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை பொறுப்பாளராக ஒருவர் இருக்கிறார் அவருக்கே கஜா புயல் எவ்வளவு வேகத்தில் அடித்தது என்று தெரியவில்லை. இவர்களெல்லாம் என்ன தொழில்நுட்ப்பம் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் இரண்டு நாட்களுக்கு முன்பே எந்த இடத்தில், எத்தனை மணிக்கு மழைபொழியும் என்பதை துள்ளியமாக சொல்லுகிறார்கள். ஆனால் இவர்கள், எல்லாம் முடிந்தபிறகு ஹெலிகாப்டரில் போய் பார்வியிடுகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.

Next Story

“அ.தி.மு.க வாக்காளர்களே..” - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Anbumani Ramadoss appeal to ADMK voters

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அந்த வகையில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க வேட்பாளரான சவுமியா அன்புமணியை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “தருமபுரி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். சவுமியா அன்புமணி ஐ.நா சபைக்கு சென்று பெண் உரிமைகளை பற்றியும், பெண் குழந்தைகளை பற்றியும் குரல் கொடுத்தவர். எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 

நாம் கால காலமாக திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து விட்டோம். நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை. உணர்வுப்பூர்வமாக உங்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். நல்ல முடிவை எடுங்கள். அதிமுக வாக்காள பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் வரப்போவதில்லை. பிரதமராகவும் வரப்போவதில்லை. ஆகையால் இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்” என்று கூறினார்.