ADVERTISEMENT

வீடியோவை வெளியிடவா? மனைவியை மிரட்டிய கணவன் கைது

04:25 PM Jan 31, 2020 | rajavel

ADVERTISEMENT

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருவதும் வழக்கமாக இருக்கும் நிலையில், சென்ற வாரம் குடித்துவிட்டு சண்டை அரங்கேறியுள்ளது. தாங்க முடியாத தினேஷ் மனைவி, தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ADVERTISEMENT



மீண்டும் தினேஷ் மாமியாரின் வீட்டிற்கு சென்று தன் மனைவியை அழைத்துள்ளார். அதற்கு அவர், உன்னுடன் நான் வாரமாட்டேன் என்று தட்டி கழித்துள்ளார். இனிமேல் விவகாரத்துதான் என்று மாமியார் வீட்டிலும் பேசியபிறகு வீட்டிற்கு வந்த தினேஷ் கெஞ்சியும் வராத நிலையில், கோபத்தில் தான் எடுத்து வைத்திருந்த மனைவியின் தங்கை ஆபாச வீடியோவை தன் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளான். நீ வீட்டிற்கு வரவில்லை என்றால் உன் தங்கையின் வீடியோவை வலைதளங்களில் போட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.


இதில் பயந்துபோன அவரது மனைவி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே மாதவரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் வளசரவாக்கம் சென்று தினேசை கைது செய்து மாதவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர். அப்போது அவர், தன் மனைவியின் தங்கை தனது வீட்டுக்கு வந்தபோது ஆபாச படம் எடுத்து வைத்திருந்தேன். தனது மனைவி குடும்பம் நடத்த வரவில்லை என்றால் இணையதளங்களில் ஆபாச படத்தை வெளியிடுவதாக இருந்தது உண்மைதான் என்று கூறியுள்ளான். இதன் அடிப்படையில் அவனை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT