சென்னை நெற்குன்றத்தில் காதல் கணவரை தலையணையால் அமுக்கி கொன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெற்குன்றத்தில் ஆட்டோ டிரைவராக இருந்தவர் நாகராஜ். இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மனைவியின் நடத்தை மீது நாகராஜ் சந்தேகப்பட்டு, அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

Advertisment

Nerkundram

Advertisment

வழக்கம்போல நேற்று இரவும் கணவன் - மனைவி இருவருக்கும் சண்டை நடந்து, இதில் மனைவி காயத்ரி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. காலையில் நாகராஜ் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கோயம்பேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது கணவர் நாகராஜ் உறங்கிக்கொண்டிருந்தபோது, தனது தோழி பானு என்பவர் உதவியுடன் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தாக காயத்ரி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கொலை செய்துவிட்டு அவர் வீட்டை விட்டு வெளியேறுவதுபோல் நடித்துள்ளார். மூன்று குழந்தைகள் பிறந்த பிறகும் தன் மீது கணவர் தன் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்ததாக காயத்ரி கூறியதாக அக்கம் பக்கத்தினர் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. காயத்ரி மற்றும் அவரது தோழி பானு ஆகியோரை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்னர்.