ADVERTISEMENT

அவசரப் பயண அனுமதி; தாசில்தாரை அணுகலாம்!

12:22 PM Mar 31, 2020 | santhoshb@nakk…


சென்னையில் இருந்து இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சைக்காக (அவசரப் பயணமாக) வெளியூர் செல்ல விரும்புவோர் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி துணை ஆணையாளர் அலுவலகத்தில் அனுமதி கடிதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரையும் அனுமதி கடிதம் பெறலாம் எனவும், காவல்துறை தரப்பில் பாஸ் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



அதேபோல் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டைப்பெற ஆட்சியரை அணுகலாம் என்றும், மாவட்டத்திற்குள் பயணிக்க தாசில்தார்களிடம் அனுமதி பெறலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT