ADVERTISEMENT
'புரெவி' புயல், கரையைக் கடந்துவிட்ட நிலையில், மன்னார் வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு வரை மிதமான மழை பெய்த நிலையில் அதிகாலை 05.30 மணிக்கு மேல் கனமழை கொட்டியது.
ADVERTISEMENT
தென் மாவட்டங்களில் மழை கொட்டும் என எதிர்பார்த்த நிலையில் சென்னையிலும் பலத்த மழை பெய்துவருகிறது. சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு முக்கியசாலைகள் நீரில் முழுகின. குறிப்பாக சென்னை மந்தைவெளி சாலை மற்றும் மந்தைவெளி பஸ் டிப்போவில் மழை நீர் தேங்கியுள்ளது.
Show comments