Skip to main content

சகஜானந்தா பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடவேண்டும்- கே.பாலகிருஷ்ணன்!!

Published on 27/01/2019 | Edited on 27/01/2019
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தில் அவரது 129 பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மற்றும்  கட்சினர்  கலந்துகொண்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
 
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன் சாமி சகஜானந்தரின் 129 வது பிறந்தநாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டி நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி மணி மண்டபம் அமைக்கப்பட்டது. அப்போதே அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்ற அவரும் நடத்தப்படும் என்றார்.
 
 ss
 
தற்போது மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சரியான உத்தரவு இல்லை என்று அவரது பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த முடியாது என்று மறுத்துள்ளார்.  சமூக பணியாற்றிய  புரட்சியாளர்களுக்கும், சீர்திருத்தவாதிகளும் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டால் அவர்களது பிறந்த நாள் விழாவை அரசு கொண்டாடுவதுதான் வழக்கம்.  அதே போன்று அரசு சார்பில் அமைக்கப்பட்ட பலமணி மண்டபங்களில் அதே போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது.  ஆனால் சுவாமி சகஜானந்தாவுக்கு மட்டும் ஏன் இந்த நிலைப்பாடு என்று தெரியவில்லை.  வரும் காலங்களில்  ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை தமிழஅரசு  அரசுவிழாவாக நடத்துவதற்கு உடனே ஆணை பிறப்பிக்க வேண்டும். 
 
 
ss

 

 
மேலும் மணி மண்டப வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கராஜன் நிதியிலிருந்து ரூபாய் 26 லட்சம் ஒதுக்கீடு செய்து நூலகம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் பூங்கா மற்றும் குளங்களை சீர் செய்யும் பணியை என்எல்சி நிர்வாகம் செய்து வந்தது தற்போது பணியைப் பாதியிலேயே நிறுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பணியை செம்மையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும்.  இதைவிடுத்து அவர்களை கைது செய்வது, சிறையில் அடைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் எதிர்விளைவுகளை உண்டு பண்ணும். அரசுக்கு மாணவர்கள் மீது எவ்வளவு அக்கறை உள்ளதோ அதைத் தாண்டி ஆசிரியர்களுக்கும் உண்டு எனவே அரசு தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். இவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர்கள் கற்பனை செல்வம், வாஞ்சிநாதன், மூர்த்தி, முத்து உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர். அதேபோல் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள், சகஜாநந்தா தோற்றுவித்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள், நந்தனார் கல்விக்கழக உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.